close
Choose your channels

அக்.17-ல் 'விஜய் 59' குறித்த முக்கிய அறிவிப்பு

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் அறிமுகப்பாடல் ஒன்று அட்டகாசமாக வந்துள்ளதாகவும், வரும் 17ஆம் தேதி இந்த பாடலின் பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை மட்டுமின்றி இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவா' படத்தில் விஜய்-ஜி.வி.பிரகாஷ்-நா.முத்துக்குமார் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே மூவர் இணைந்திருக்கும் இந்த படத்தின் பாடல்களும் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.