close
Choose your channels

கடன் வாங்கி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

Wednesday, October 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் வார இறுதியில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில் நேற்று விஜய் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தபோது போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மொபைலில் இருந்து தான் விஜய்க்கு மிரட்டல் வந்துள்ளது என்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் தன்னுடைய மொபைல் போனை சேப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசுவதற்காக கடன் கேட்டதாகவும், அவருக்கு தனது மொபைல் போனை கொடுத்ததாகவும் அவர் கூறினார். 

இதனையடுத்து போரூர் இளைஞரிடம் கடன் வாங்கி பேசியவர் தான் மிரட்டல் விடுத்த நபராக இருக்கும் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அந்த நபர் பிடிபட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.