close
Choose your channels

புல்லரிக்க வைக்கும் விஜய்யின் பரந்த மனம். ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

Monday, October 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் பரந்த மனம் குறித்து பல சம்பவங்கள் வெளிவந்துள்ள நிலையில் சமீபத்தில் விஜய்யை சந்திக்க தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது குறித்து சிந்தியா விஸ்வா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிப்பெருக்குடன் விவரித்துள்ளார்.

அவர் கூறியதாவது: நான் விஜய்யின் தீவிர ரசிகை இல்லை. ஆனால் எனது கணவர் விஜய்யின் தீவிர ரசிகர். எனவே எனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக நண்பர் ஒருவரின் உதவியோடு விஜய்யை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தோம். மிகப்பெரிய நடிகரான விஜய் தனக்கிருக்கும் பிசியில் எங்கே எங்களுக்கு அப்பாயின்மெண்ட் தரப்போகிறார் என்று சந்தேகத்துடன் இருந்த நிலையில், விஜய்யிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது.

எனது கணவர் மற்றும் நண்பருடன் விஜய்யை சந்தித்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒருவர், சிறிது கூட கர்வமின்றி எங்களை இன்முகத்துடன் வரவேற்று எங்களுடன் அன்பாக பேசினார். மேலும் எனது மகனை கையில் தூக்கி அவனுடன் விளையாடினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது விஜய்க்கு ஏன் இவ்வளவு தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது. விஜய் ஒரு அபாரமான பெர்சனாலிட்டி உள்ளவர் என்பதும் மனித நேயமுள்ள ஒரு மனிதர் என்பது எங்களுக்கு அன்றையை தினம் புரிய வந்தது. விஜய்யுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த எனது நண்பருக்கு மிகப்பெரிய நன்றி' என்று சிந்தியா வாசு என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புல்லரிக்கும் சம்பவத்தை படிக்கும் ஒவ்வொருவரும் விஜய்யின் பரந்த மனதை குறிப்பாக விஜய்யை வெறுப்பவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.