close
Choose your channels

விருது பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றிய விஜய்

Sunday, April 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று இயக்குனர் ரவிகுமார் உள்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருது பெற்ற கேரள மாநில குழந்தை நட்சத்திரம் ஆதிஷ் பிரவின் நேற்று விஜய்யை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுகுறித்து 'விஜய் மக்கள் இயக்கம்' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசு 2017ஆம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக செல்வன் ஆதிஷ் பிரவின் அவர்களை தேர்வு செய்தது. விருது அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வன் ஆதிஷ் பிரவின் அவர்கள் எனக்கு இந்த விருது கிடைத்ததைவிட இளையதளபதி விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று பேட்டி அளித்தார். இதனை இளையதளபதி விஜய் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இளையதளபதி விஜய் அவர்கள் உடனே செல்வன் ஆதிஷ் பிரவீன் அவர்களை நேரில் அழைத்து வருமாறு கூறினார்

செலவன் ஆதிஷ் பிரவின் அவர்களும் உடனடியாக சென்னைக்கு வந்து இளையதளபதி விஜய் அவர்களை சந்தித்து இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடினார்கள். மேலும் தன்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டு அழகு பார்த்த இளையதளபதி விஜய் அவர்கள் செல்வன் ஆதிஷ் பிரவின் அவர்களை மென்மேலும் பல விருதுகளை வென்று வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் அவரது அம்மா மற்றும் கேரள இளையதளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.