close
Choose your channels

மெர்சலுக்காக மக்களே குரல் கொடுக்க வேண்டும்: விஜய்சேதுபதி

Saturday, October 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்களை பாஜகவினர் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் இந்த படம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருக்காது. ஆனால் தேவையில்லாமல் தமிழக பாஜக தலைவர்கள் கிளப்பிவிட்ட பிரச்சனையால் இன்று இந்த பிரச்சனை குறித்து ராகுல்காந்திக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களும் மெர்சல் படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் தற்போது ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: கருத்துச் சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள். மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.