close
Choose your channels

தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று புத்துணர்ச்சியுடன் திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால் தேமுதிக தலைமை அலுவலகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்'. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.