close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள்!

Monday, February 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன், பிரபு, விக்ரம் பிரபு என மூன்று தலைமுறை நடிகர்கள் தமிழ் திரையுலகில் அரிது இல்லை என்றாலும் மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் அருண்விஜய்யின் மகன் ஆரவ் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அருண்விஜய் நடித்து வருவதாகவும் இவர்களது படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகர் விஜயகுமாரும் இணைந்துள்ளார். இதனை அடுத்து விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ்விஜய் ஆகிய மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தை இயக்குனர் சரவ் சண்முகம் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து இருப்பது குறித்து அவர் கூறிய போது, ‘ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் இணைவது பெருமையாக இருக்கிறது என்றும், குறிப்பாக அருண்விஜய் மற்றும் விஜயகுமார் ஆகியோர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதில்லை என்றும், அவர்களது கதாபாத்திரம் குறித்தும் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கி அவர்களை நடிக்க சம்மதிக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.