close
Choose your channels

5 ஆண்டு 'பாகுபலி' சாதனையை முறியடித்த 'விக்ரம்': தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?

Monday, June 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ‘பாகுபலி’ திரைப்படம் பெற்றிருந்த நிலையில் அந்த சாதனையை கமல்ஹாசனின் 'விக்ரம்’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 152 கோடி ரூபாய் வசூலித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிக வசூல் பெற்ற படங்களில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி வெளியான கமல்ஹாஸனின் ’விக்ரம்’ திரைப்படம் ‘பாகுபலி’ பட வசூலை முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் ’விக்ரம்’ திரைப்படம் 17 நாட்களில் 152 கோடியையும் தாண்டி வசூல் செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ’விக்ரம்’ பெற்றுள்ளது. இதனை அடுத்து ’விக்ரம்’ பட குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.