'தெறி' ஆடியோவுக்கு சமந்தா ஏன் வரவில்லை?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இளையதளபதியின் 'தெறி' ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தாலும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நாயகி சமந்தா இந்த விழாவில் ஆஜராகவில்லை.
நேற்று மாலையே சமந்தா தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'தனக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதால் 'தெறி' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு வருந்துவதாகவும் இருப்பினும் 'தெறி` பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
'தெறி' பாடல் வெளியீட்டு விழாவில் சமந்தாவின் கேரக்டர் குறித்து அட்லி கூறியபோது, 'ராஜா ராணி' படத்தில் நயன்தாராவுக்கு உள்ள முக்கியத்துவம் இந்த படத்தில் சமந்தாவுக்கு இருக்கும் என்றும் இந்த படத்திற்கு அவரது கேரக்டர் பெரிதும் சப்போர்ட் செய்ததாகவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.