close
Choose your channels

ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவாரா? தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

Friday, February 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் மீது பாலியல் புகார் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஏ.ஆர். முருகதாஸ், பவன்கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்களின் மீதும் இவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசுவதாகவும் இந்த புகாரின் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த புகாருக்கு ஆதாரமாக ஸ்ரீரெட்டி வீடியோவையும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் ஸ்ரீ ரெட்டி கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.