close
Choose your channels

சரத்குமார், ராதாரவி கைதா? சென்னை ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு!

Sunday, May 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை இருவரும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றதாக நடிகர் சங்கத்தின் தற்போதைய செயலாளர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது விஷாலின் மனுவில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'நடிகர் சங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவைபட்டால் கைது செய்து விசாரணை செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்த அறிக்கையை மூன்று மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த உத்தரவின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமார், ராதாரவி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.