close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு விருதில்லை என்றால் விருதுக்கே பெருமையில்லை: பிரபல ஒளிப்பதிவாளர்

Wednesday, December 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதிக்கு விருது இல்லை என்றால் அந்த விருதுக்கு பெருமை இல்லை என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ’மாமனிதன்’ என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’மாமனிதன்’ படம் குறித்து தனது அனுபவங்களை கூறினார்

’மாமனிதன்’ திரைப்படம் தர்மதுரை போன்ற கதை இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் அடுத்தவர்களை பார்த்து வாழ வேண்டாம் நமக்காக நாம் வாழ்வோம் என்ற செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்ப கதை என்றும் தெரிவித்தார்

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஆகிய இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்து உள்ளதாகவும் இருவருக்கும் தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்தில் ஒரு புதிய முயற்சியாக நான்கு நிமிட காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளதாகவும் இதற்காக விஜய் சேதுபதி காயத்ரி ஆகிய இருவரும் பக்காவாக ரிகர்சல் செய்து ஒரே டேக்கில் நடித்து அசத்தினார்கள் என்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கூறியுள்ளார்

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள ’மாமனிதன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.