close
Choose your channels

'சித்தி 2' தொடர் குறித்து அதிர்ச்சி முடிவெடுத்த ராதிகா: வைரல் டுவீட்

Thursday, February 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா தயாரித்து நடித்த ’சித்தி’ சீரியல் கடந்த 1999ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ’சித்தி 2’ சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த சீரியலில் ராதிகா சரத்குமார், ப்ரீத்தி சர்மா, நந்தா லோகநாதன், தர்ஷனா ஸ்ரீபால், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பி வரும் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெண்கள் மத்தியில் பெற்று வந்த நிலையில் தற்போது திடீரென இந்த சீரியலில் இருந்து தான் விலகுவதாக ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில் கூறியதாவது ’சித்தி 2’ என்ற மெகா சீரியலில் இருந்து நான் வெளியேறும் முடிவை எடுத்தது மகிழ்ச்சி மற்றும் வருத்தம் ஆகிய இரண்டு சாயலும் கலந்த ஒரு மனநிலையில் இருந்தேன். எனது இத்தனை ஆண்டுகளில் மிகச் சிறந்த மற்றும் கடினமான உழைப்பை கொடுக்கும் சீரியல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் குட் பை என சொல்வது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்களான கவின், வெண்பா, யாழினி கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.