இயக்குநர் சுந்தர்.சி-க்கு யோகி பாபு கொடுத்த அட்டகாசமான பரிசு… வைரல் புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் கலக்கி வரும் யோகி பாபு மகா அமாவாசையை முன்னிட்டு இயக்குநர் சுந்தர்.சி-யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது கையில் ஒரு அழகான பிள்ளையார் சிலையை கொண்டுசென்ற அவர் அதை இயக்குநருக்குப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “அரண்மனை3“ திரைப்படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மனோபாலா போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். கூடவே மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு இயக்குநர் சுந்தர்.சியை நேரில் சந்தித்து தனக்குப் பிடித்த பிள்ளையார் சிலையை பரிசாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. “அரண்மனை3“ படத்தைத் தவிர நடிகர் யோகி பாபு சூப்பர் ஸ்டாருடன் “அண்ணாத்த“ திரைப்படத்திலும் அதேபோல தல அஜித்துடன் “வலிமை“ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனால் யோகி பாபு ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான்.
மேலும் “வீரப்பணின் கஜானா“, “பன்னிக்குட்டி“, “பிஸ்தா“, “பூச்சாண்டி“, “சலூன்“ என ஒரு டஜன் படங்களை நடிகர் யோகி பாபு தனது கைவசம் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.