close
Choose your channels

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? ராஜேஷ் எம்.செல்வா

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி, கமல் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்தபோது கமலுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபத்தில் நடந்து கொண்டிருந்தபோது, முக்கிய காட்சி ஒன்றின் படப்பிடிப்பிற்காக த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோர் செட்டிற்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு மேக்கப் போடும் மேக்கப்மேனை அழைக்க நான் மறந்துவிட்டேன். இதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு பாதிக்கப்படுமோ என அஞ்சி, இந்த விஷயத்தை நான் தயங்கிபடியே கமல் சாரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டபோது, அவர் கூலாக 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி அவரே த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோர்களுக்கு மேக்கப் போட்டுவிட்டார்.

அந்த பத்து நாள் படப்பிடிப்பிலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சி குறைவாக இருந்த நிலையிலும் அவர் ஒரு மேக்கப்மேனாக பணிபுரிந்து, படப்பிடிப்பிற்கு உதவியதை என்னால் மறக்கவே முடியாது' என்று கூறியுள்ளார்.

மேலும் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதை உறுதிப்படுத்திய ராஜேஷ் எம்.செல்வா, கமல் சார் என்னிடம் ஒரு நண்பர் போல பழகினாலும் நான் அவரை என்றுமே என்னுடைய நண்பர் என்ற பார்வையில் பார்ப்பதில்லை. அவர் என்னுடைய குரு மற்றும் ஒரு நல்ல 'பாஸ்'' என்று ராஜேஷ் செல்வா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.