close
Choose your channels

'தர்பார்' படத்திற்கு திடீர் போராட்டம்: திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

Sunday, January 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏற்பட்ட சில தடங்கல்கள் முறியடிக்கப்பட்டு, திட்டமிட்டபடி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சியில் உள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடகாவில் ரஜினியின் ’தர்பார்’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்பு ஒன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழி தவிர மற்ற மொழிகளில் தயாராகும் படங்களை வெளியிட ஏற்கனவே அந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது ’தர்பார்’ திரைப்படம் கன்னட மொழியில் மொழிபெயர்க்க படாமல் நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்வதற்கு இந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கன்னட மொழிபெயர்க்கப் பட்டால் மட்டுமே ’தர்பார்’ படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரஜினியின் முந்தைய படங்கள் வெளியாகும் போதும் இந்த அமைப்பு இதே போன்ற போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.