close
Choose your channels

அஜீத் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய மர்ம நபர்கள் மீது புகார்

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேதாளம்' படத்தின் டப்பிங்கை நேற்று அதிகாலை 4 மணி அளவில் அஜீத் முடித்துவிட்டதாக நேற்று காலை செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை குறித்து சில விஷமிகள் இணையதளத்தில் வதந்திகளைப் பரப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு வதந்தியை பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று மாலை அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவரின் சமூக வலைத்தளத்தை மர்ம நபர்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை போட்டோஷாப் மூலமாக மாற்றி "அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்" என்று சமூக வலைத்தளம் மூலமாக மர்ம நபர்கள் வதந்தியை பரப்பியுள்ளனர்.

அந்த புகைப்படம் அனைத்து பிரபல சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியபோது, "அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்" என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.