close
Choose your channels

நடிகை நிக்கி கல்ராணியின் உடைகள் எங்கு போகிறது தெரியுமா? வீடியோ வைரல்!

Monday, May 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக நல்ல உணவு, உடை இல்லாமல் அவதிப்படும் பொது மக்களுக்காக நடிகை நிக்கி கல்யாணி ஒரு புதிய முயற்சியை செய்துள்ளார்.

இதற்காகவே அவர் தனியாக ஒரு அமைப்பு உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் பொதுமக்கள் தேவையில்லாமல் வைத்திருக்கும் பொருள்களை திரட்டுகிறார். இந்த பொருட்கள் விற்பனை செய்து பணமாக்கப்பட்டு அந்த பணத்தின் மூலம் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவர் முயற்சித்துள்ளார்.

இந்த அமைப்பின் மூலம் நல்ல தரத்தில் உள்ள ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள், காலணிகள், கைப்பைகளை கொடுக்கலாம் என அவர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். நடிகை நடிகை நிக்கி கல்ராணி தன்னுடைய பங்காக தன்னுடைய தேவைக்கு போக மீதமுள்ள உடைகளை கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.