எனது மகள் சினிமாவில் நடிக்கின்றாரா? நடிகை ரோஜா விளக்கம்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா என்பதும் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூகா மாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் துருவ் விக்ரம் ஜோடியாக அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு ஏற்கனவே ஆர்கே செல்வமணி மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது நடிகை ரோஜா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ரோஜா தனது பிறந்தநாளை அடுத்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘என்னுடைய மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் தான். அவர் அதற்கு ஒப்புக் கொண்டால் நானே அவரை ஊக்கப்படுத்துவேன். ஆனால் எனது மகளுக்கு சினிமா நடிகையாக விருப்பம் இல்லை. அவர் விஞ்ஞானியாக வரவேண்டும் ஆசைப்படுகிறார். எனவே என்னுடைய மகள் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்று கூறினார்.
இதனை அடுத்து ரோஜா மகள் சினிமாவில் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.