close
Choose your channels

காஷ்மீர் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்திய த்ரிஷா.. என்ன செய்திருக்கின்றார் பாருங்கள்..!

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா தற்போது காஷ்மீரில் விஜய்யின் ’லியோ’ படத்தின் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த் , மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இன்று முதல் இந்த படப்பிடிப்பில் சஞ்சய்தத் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஷ்மீர் ’லியோ’ படப்பிடிப்புக்காக சென்றுள்ள த்ரிஷா ஏற்கனவே படக்குழுவினர் மற்றும் காஷ்மீரின் அழகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். குறிப்பாக சிவராத்திரி தினத்தில் காஷ்மீரில் உள்ள லிங்கம் சிலைக்கு அவர் பாலாபிஷேகம் செய்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

அந்த வகையில் தற்போது தான் தங்கி இருக்கும் ஹோட்டல் ஜன்னலில் குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குரங்குகள் மீது எந்த விதமான பயமும் இல்லாமல் அவர் படுக்கையில் உட்கார்ந்து கொண்டே பழங்களை கொடுக்க குரங்குகள் அந்த பழங்களை சாப்பிடுகின்றன.

ஏற்கனவே விலங்குகள் நலத்தில் அக்கறை காட்டும் த்ரிஷா படப்பிடிப்புக்கு சென்ற இடத்திலும் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.