close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தமிழுக்கு குரல் கொடுத்த சிம்பு-அனிருத்: வைரலாகும் டுவிட்!

Tuesday, April 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழுக்காக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் தமிழுக்கு குரல் கொடுத்து பதிவு செய்துள்ள ட்வீட்டுக்கள் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மாநிலங்களுக்கு இடையே உள்ள பயன்பாட்டு மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என பேசினார். இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் ஏஆர் ரஹ்மான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்

குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இது குறித்து கூறிய போது தமிழ்தான் இணைப்பு மொழியாக வேண்டும் என்று கூறினார். அதற்கு ஏராளமான ஆதரவும் ஒருசில கண்டனங்களை பதிவு செய்யப்பட்டன

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை அடுத்து நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ’தமிழால் இணைவோம்’ என பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு ஏராளமான ஆதரவு குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.