close
Choose your channels

ஆஸ்கார் சர்ச்சைக்கு பின் இந்தியா வந்த வில்ஸ்மித்: வைரல் புகைப்படங்கள்

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் மற்றும் நடிகர் கிறிஸ் ராக் என்பவரை கன்னத்தில் அடித்த சர்ச்சைக்கு பின் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் இந்தியா வந்துள்ளார்

கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தன்னுடைய மனைவியை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொகுப்பாளர் கிறிஸ் ராக் என்பவரை ஆஸ்கர் மேடையில் பளார் என கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் அடித்தார். இதனையடுத்து அவர் பத்தாண்டுகளுக்கு ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்கர் சர்ச்சைக்குபின் நடிகர் வில் ஸ்மித் தற்போது இந்தியா வந்துள்ளார். நடிகர் வில்ஸ்மித் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கும் ஓட்டல் வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

வில்ஸ்மித்துடன் காவி உடை அணிந்த துறவி ஒருவர் வந்திருப்பதாகவும் அவர் சத்குருவை சந்திப்பதற்காக வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வில்ஸ்மித் இந்தியாவின் வருகை எதற்கு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.