close
Choose your channels

கல்லூரியில் படிக்கும் போதே என்னை ஒருவன் ஏமாற்றிவிட்டான்: அஜித் பட நடிகையின் அதிர்ச்சி தகவல்..!

Monday, April 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான் கல்லூரியில் படிக்கும் போதே தன்னை ஒருவன் காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை நடிகை வித்யா பாலன். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் `தோ அவுர் தோ பியார்' என்ற படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களை தெரிவித்தார்.

தான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவனை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதலன் காதலர் தினத்தில் தன்னுடைய முன்னாள் காதலியை டேட்டிங் செய்யப் போவதாக கூறிவிட்டு என்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்தார்.

முதல் காதலே தோல்வி அடைந்த நிலையில் நான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன் என்றும் வலி மிகுந்த நாட்களாக பல நாட்களை நான் கழித்தேன் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் அந்த தோல்வி தான் நான் முன்னேற வழி வகுத்தது என்றும் அதன் பிறகு நான் வெறித்தனமாக வேலை செய்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

நான் அடிக்கடி டேட்டிங் செல்வது கிடையாது என்றாலும் சிலருடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் என்று கூறிய வித்யா பாலன், அதே நேரத்தில் அதிக நாட்கள் டேட்டிங் செய்த நபரை நான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வித்யா பாலன் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.