close
Choose your channels

நான் வெளியேறியதற்கு இதுதான் உண்மையான காரணம்: ரசிகரிடம் மனம் திறந்த அனிதா!

Friday, January 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஆரியிடம் மிகவும் கோபமாக பேசியதால் தான் ஆரியின் ரசிகர்கள் அவரை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அனிதாவிடம், ‘நான் உங்களை சன் டிவி சேனலில் பார்த்ததில் இருந்தே ரசிகராக உள்ளேன். அதில் நீங்கள் அழகாக இருப்பீர்கள். நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது சரிதான் என்று நினைக்கின்றீர்களா? என்று கேட்டுள்ளார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு பதில் கூறிய அனிதா, ‘நான் வெளியே வந்ததுக்கு நான் தான் காரணம். என்னுடைய கேள்வி சரிதான் என்றாலும், அதை வெளிப்படுத்திய விதம் தவறு. அதனால் தான் அந்த வீட்டில் இருந்து நான் எவிக்ட் ஆனேன். மேலும் நான் அந்த வாரம் மனதளவில் வெளியேற தயாராகவும் இருந்தேன். எனக்கு வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணமும் அதற்கு முந்தைய வாரமே வந்துவிட்டது

ஆனால் நான் வெளியே வந்ததற்கு பின்னர் தான் கேமே ஆடாதவங்க, சேஃப் கேம் ஆட்றவங்க, தங்களுடைய கருத்துக்களை முன்வைக்காமல் நல்ல பேரு வாங்கிட்டு இருப்பவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்று எனக்கு புரிந்தது’ என்று கூறியுள்ளார். அனிதா குறிப்பிட்டவர்கள் யார் யாரை என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.