close
Choose your channels

'சர்கார்' விழாவை ஏன் தொகுத்து வழங்கவில்லை: பிரபல தொகுப்பாளினி தகவல்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினர். இருவருமே இந்த விழாவை நன்றாக தொகுத்து வழங்கினார்கள். விஜய்யே இருவருக்கும் தனது பாராட்டுதல்களை தெரிவித்திருந்தார்.

இருப்பினும் விஜய்யின் தீவிர ரசிகையான தொகுப்பாளினி அஞ்சனா தொகுத்து வழங்கியிருந்தால் இந்த விழா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று பலர் கருத்து கூறினர். இதனை ஒருசில ரசிகர்கள், அஞ்சனாவிடமே சமூக வலைத்தளம் மூலம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அஞ்சனா, 'விஜய் பட விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை மிஸ் செய்துவிட்டேன். இருப்பினும் உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் எனது நன்றிகள். எனது குழந்தையை பார்த்து கொள்ளவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. ஆனாலும் எனது தோழி தியா நிகழ்ச்சியை நன்றாக தொகுத்து வழங்கினார். கலக்குமா நீ? என பதிலளித்துள்ளார். மேலும் தியா இந்த விழாவினை தொகுத்து வழங்கியதால் தான் சத்தியமாக பொறாமைப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.