close
Choose your channels

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண்விஜய்யின் விளக்கம்

Tuesday, August 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக அருண்விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அருண்விஜய் கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில் தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ரசிகர்களுக்கு விளக்க கடிதம் ஒன்றை அருண்விஜய் எழுதியுள்ளார்.
எனது அனைத்து ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நான் கூறிக்கொள்வது என்னவெனில், நான் எந்த காரணத்திற்காகவும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை செய்பவன் நான் அல்ல. நான் எனது சொந்த வேலை காரணமாகவும், மன நிம்மதிக்காகவும்தான் வெளியூர் சென்றிருந்தேன். சட்டங்களை மதிக்கும் ஒரு நல்ல குடிமகனாக எனக்கு எதிரான வழக்கை சட்டப்படி சந்திப்பேன். ஆனால் இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை
என்னிடம் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்காமல் என்னை பற்றிய தவறான தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். இவ்வாறு அருண்விஜய் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.