close
Choose your channels

சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Tuesday, December 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டதால் சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.


சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்க தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தேவைப்பட்டால் நீதிபதி அந்த பாடலை கேட்ட பின்னர் தனது தீர்ப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பாடலை தான் கேட்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் வார்த்தைகளை எச்சரிக்கையுடனும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்து பிற்பகலுக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'இந்த வழக்கை வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதி, சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ஆம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் அதே நேரத்தில் விசாரணைக்காக சிம்புவை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை என்றும் உத்தவிட்டார். இதனால் சிம்பு எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.