close
Choose your channels

தற்கொலை செய்து கொண்ட தென்னை விவசாயி குடும்பத்திற்கு அமீர், பாரதிராஜா உதவி

Friday, November 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் டெல்டா மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. பிள்ளையை போல் வளர்த்த தென்னம்பிள்ளைகள் தரையில் வீழ்ந்து கிடந்ததை பார்த்து பல தென்னை விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜன் என்பவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த தென்னை மரங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சுந்தர்ராஜன் குடும்பத்தாரை இன்று இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ. 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர். உதவி செய்த இயக்குனர்களுக்கு சுந்தர்ராஜன் குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.