close
Choose your channels

கமல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் ஆரி உள்பட 4 போட்டியாளர்கள்!

Sunday, January 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமல் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லும் போட்டியாளர்கள் இன்று அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிலும் ஆரி கூட அமைதியாக இருப்பது அனைவரும் ஆச்சரியத்திற்கு காரணமாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில் ரம்யா, கேபி மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுகிறார் என்றும் இருவர் அடுத்த வாரத்திற்கு செல்லப் போகிறார் என்றும் கமலஹாசன் கூறுகிறார்.

அப்போது சேவ் செய்யப்பட வேண்டும் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஆரி, பாலாஜி, சோம் மற்றும் ரியோவிடம் கமல்ஹாசன் கேட்கிறார். கமல்ஹாசனின் கேள்விக்கு ஆரி உள்பட யாரும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றனர்.

இதனை அடுத்து நான் கேள்வி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றீர்கள், அதனால் நானே சொல்லி விடுகிறேன் என்று கூறி வெளியேறும் போட்டியாளரின் பெயரை கூறுவதற்கு தயாராகிறார் கமல். இத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.