close
Choose your channels

இறவியை முடித்த எஸ்.ஜே.சூர்யா-பாபிசிம்ஹா

Monday, July 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் மூன்றாவது படமான 'இறவி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி, அஞ்சலி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதி-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக ஏற்கனவே பார்த்தோம்.


இந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபிசிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது விஜய்சேதுபதி -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பில் நடிகை கமாலினி முகர்ஜி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கருணாகரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனங்கள் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.