close
Choose your channels

நான் நடிச்சிருந்தா விஜய்சேதுபதி கிடைச்சிருக்க மாட்டாரு: 'பாய்ஸ்'நடிகரின் கூலான பேட்டி

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் மட்டும் ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்திருந்தால் விஜய் சேதுபதி என்ற அருமையான நடிகர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார் என ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படத்தில் நடித்திருந்த நான்கு நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் ’பாய்ஸ்’ படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தது என்பதும் அதை அவர் மிஸ் செய்துவிட்டதாகவும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்பாக சீனு ராமசாமி இயக்கிய ’தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லை என்றும் அதன் பின்னர் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடித்ததாகவும் அவர் கூறினார். மேலும் ’நல்ல வேளை நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கவில்லை என்றும் அந்த படத்தில் நான் நடித்து இருந்தால், விஜய் சேதுபதி என்ற அருமையான நடிகர், தமிழ் திரை உலகிற்கு கிடைத்திருக்க மாட்டார் என்றும் அவர் மிக அருமையாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி என்றும் கூறினார்.

இந்த பேட்டி குறித்து விஜய் சேதுபதி கூறும்போது ’நான் மணிகண்டனின் பேட்டியை பார்த்தேன். ரொம்ப கூலாக இருந்தது அவரது பேட்டி. நான் அந்த பேட்டியின் டிரைலரை பார்க்கும்போது அவர் ரொம்ப கஷ்டப்படுகிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் அந்த பேட்டியில் பேசியபோது ரொம்ப ஜாலியாக, ஓப்பனாக, கூலாக இருந்தார். அவருடைய பேட்டியை பார்ப்பதற்கு பாசிட்டிவாக இருந்தது. மேலும் கண்டிப்பாக மணிகண்டன் அவர்கள் மிக விரைவில் பிசியான ஒரு நடிகராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றும் விஜய்சேதுபதி தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.