close
Choose your channels

நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்! ஆனால்... நீதிமன்றம் உத்தரவு

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் விஷால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அளிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ஆம் தேதியே நடத்தலாம் என்றும் ஆனால் வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்த உத்தரவுக்கு பின்னரே தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து கூறிய நடிகர் நாசர், திட்டமிட்டபடி நாளை மறுநாள் தேர்தலை நடத்துவோம் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவு தெளிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாங்கள் நீதியை மதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.