close
Choose your channels

இன்றைய எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Friday, August 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்ட நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

நேற்று எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்காக உலகமே பிரார்த்தனை செய்த நிலையில் அந்த பிரார்த்தனையின் பலனாக தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் எஸ்பிபி உடல்நிலை சீராக இருப்பது குறித்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.