close
Choose your channels

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா பகுதிகளை துவம்சம் செய்துவிட்ட நிலையில் அந்த பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு கணக்கிட முடியாத அளவுக்கு உள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம், கால்நடை சேதம் என டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை கஜா புயல் சுருட்டி கொண்டு போய்விட்டது.

இந்த நிலையில் பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் கோலிவுட் திரையுலகினர் டெல்டா பகுதி மக்களின் துயர் துடைக்க தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சீயான் விக்ரம் ரூ.25 லட்சம் கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ரூ.25 லட்சம், லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி, ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விஜய் ரூ.45 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ஷங்கர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம், நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.