close
Choose your channels

'தர்பார்' படம் குறித்து லைகாவின் முக்கிய அறிவிப்பு

Thursday, May 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'தர்பார்' திரைப்படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சில புதிய நட்சத்திரங்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், உள்பட பலர் நடித்து வரும் 'தர்பார்' படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசைமைக்கின்றார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.