close
Choose your channels

நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த விஜய்

Tuesday, March 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் பேசிய விஜய் தனது ரசிகர்களுக்காக ஒரு குட்டி கதையை சொன்னார்.

அந்த கதையில் முன்னாள் சீன அதிபர் மாவோ என்பதற்கு பதிலாக முன்னாள் ரஷ்ய அதிபர் மாவோ என்று கூறினார். இதை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பலர் சுட்டிக்காட்டினர்.
இந்த தகவல் அவருடைய பி.ஆர்.ஓ முலம் விஜய்க்கு தெரிய வர இதுகுறித்து விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார். 'பெரிய மேடைகளில் சில கருத்துக்களை நாம் தெரிவிக்குமோது இதுமாதிரியான தவறுகள் சிலசமயம் ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நான் வருந்துகிறேன். இருப்பினும் நான் கூறிய கதையின் கருத்து எனது ரசிகர்களிடம் சென்றடையும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.