close
Choose your channels

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை: ஓவர்டைம் வேலை செய்யும் இயக்குனர்!

Friday, March 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அஜித் நடித்து வரும் கோர்ட் சீன்கள் குறித்த படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்பை ஒரு பக்கம் நடத்தி கொண்டே, படப்பிடிப்பு தளத்திலேயே எடிட்டிங் பணியையு கவனித்து வருவதாகவும், இதற்காக அவர் ஓய்வின்றி இரவுபகலாக ஓவர்டைம் வேலை செய்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது படப்பிடிப்பில் மட்டுமே முழு கவனத்தில் இருக்கும்போது, ஒருசிலர் டுவிட்டரில் அவர்களாகவே மே 1ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டு தற்போது மே 1ல் ரிலீஸ் இல்லை என்றும் டுவீட் போட்டு வருகின்றனர். உண்மையில் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர்களிடம் எந்தவித திட்டமும் இல்லை என்பதும் படப்பிடிப்பு முடிந்தபின்னர் தான் ரிலீஸ் தேதி குறித்து ஆலோசிக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அஜித் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கும் இந்த படத்தில் ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்ற்னர். இந்த படம் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.