பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ஆண் குழந்தை
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான பிரசன்னா-சினேகா தம்பதிக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனக்கு மகன் பிறந்த இந்த நாள் தன்னுடைய வாழ்வில் மிக முக்கியமான நாள் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் பிரசன்னா மற்றும் சினேகா நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு பெற்றோர்களின் ஆசியோடு 2012ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி திருமணம் பிரசன்னா-சினேகா திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்த சினேகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். இதையடுத்து இன்று அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.