close
Choose your channels

ரஜினி பட இயக்குனரை அழைத்து பாராட்டிய கமல்

Thursday, October 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கியதால் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனராக மட்டுமின்றி நல்ல தரமான படங்களை தயாரித்து, புதிய திறமையுள்ள இயக்குனரகளுக்கு வாய்ப்பு கொடுத்தும் வருகிறார்.

அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை ஏற்கனவே ஊடகங்கள், சமூக வலைத்தள விமர்சகர்கள் பாராட்டி வரும் நிலையில் தற்போது கமல்ஹாசன் படக்குழுவினர்களை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் கமல் தங்களை பாராட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் குறித்த கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், 'மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். Carry on the good work' என குறிப்பிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

அதேபோல் தளபதி விஜய் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.