close
Choose your channels

அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு: காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' டிரைலர்..!

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வந்த ’காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜூன் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இரு மதத்தினர் ஒற்றுமையாக இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனையை முடித்து வைக்க ஜெயிலில் இருந்து வரும் காதர் பாட்சா என்ற மாணிக்கம் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

ஆர்யா முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகளில் ஆவேசமான வசனங்களிலும் ஸ்கோர் செய்கிறார். சித்தி இதானிக்கு படத்தின் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பது தெரிய வருகிறது. அதேபோல் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன், தமிழ், மதுசூதனராவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட்ராஜன் படத்தொகுப்பில், அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மொத்தத்தில் முத்தையா பாணியில் ஒரு கிராமத்து அதிரடி ஆக்சன் படம் தான் இந்த ’காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

இந்த டிரைலரில் உள்ள ஒருசில ஆவேசமான வசனங்கள் இதோ:

உன் ஒருத்தி கழுத்துல தாலி ஏறுறதுக்குள்ள ஊருக்குள்ள பல பேரோட தாலி இறங்கிடும் போல இருக்கு

டேய் யார்ரா நீ, ஊருக்குள்ள புகுந்த ஒரு மணி நேரத்துல மூணு முக்கியமான தலைக்கட்ட அடிச்சி இருக்க..

அந்த காதர் பய இருக்கிற வரைக்கும் ஒரு பிடி மண்ணை கூட நம்மளால எடுக்க முடியாது

தனித்தனியா நின்னா தண்ணி தான் காட்டுவாங்க, கூடி நின்னா தான் அடுத்தவன் குலைய அறுக்க முடியும்

எங்களுக்கு கர்வம், கவுரவம் மட்டும்தான் முக்கியம், அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம்

பேர் மாறினாலும் ஊர் மாறினாலும் உறவு மாறாது, இங்கே இருக்கிற சேது தான் அங்க சையது ஆ இருக்கான், இங்க இருக்குற கருப்பையா தான் காதரா இருக்கான்

அரியும் சிவனும் ஒன்னு, அது அறியாதவன் வாயில மண்ணுங்கிறது இப்ப தேவையில்ல.. அல்லாவும் அய்யனாரும் ஒண்ணும், அதை அறியாதவன் வாயில மண்ணுங்கிறது தான் இப்ப தேவை..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.