close
Choose your channels

ஃபேமிலியுடன் டின்னர்: கீர்த்தி சுரேஷின் வைரல் புகைப்படம்!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதிகளின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடித்த ’இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ’ரஜினிமுருகன்’ ’ரெமோ’ ’பைரவா’ ’நடிகை திலகம்’ ’சீமராஜா’ ’சண்டக்கோழி 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ், நடிகர் நிதின் உடன் நடித்த ’ராங் டே’ என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது திரைப்படம் ரிலீஸ் ஆன சந்தோஷத்தில் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ் டின்னர் சாப்பிடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரி ரேவதி சுரேஷ் ஆகியோர்களுடன் உள்ளார். இந்த பதிவில் ’குடும்பத்துடன் சில நிமிடங்கள், ரேவதி சுரேஷூடன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு டின்னர்’ என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.