close
Choose your channels

நடிகையின் கள்ளக்காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

Wednesday, August 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த விஷ்ணுப்ரியாவின் தந்தை, மகளின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து கூலிப்படை வைத்து கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிரபாகரன் என்ற டிரைவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையின்போது பிரபாகரனின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவருடைய நண்பரும் டிரைவருமான செந்தில்குமார் என்பவருடன் தான் கடைசியாக பேசியது தெரிய வந்தது.

இதனையடுத்து செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகை விஷ்ணுப்ரியாவின் கணவர் ரமேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு மனநிலை சரியில்லாததால் கொடைக்கானலில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கணவரை அவ்வப்போது கொடைக்கானல் சென்று பார்க்கும் விஷ்ணுப்ரியாவுக்கும் டிரைவர் பிரபாகரனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தும் பிரபாகரனை திருமணம் செய்ய விஷ்ணுப்ரியா முடிவு செய்ததாக தெரிகிறது. இதனை அவர் தனது தந்தையிடமும் கூறியுள்ளார்.

மகளின் கள்ளக்காதலால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கொடைக்கானலில் உள்ள செந்தில்குமாரிடம் கூலிப்படை உதவியுடன் பிரபாகரனை கொலை செய்யுமாறு கூறி ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளதாகவும், இதன்படி பிரபாகரனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கழுத்தை அறுத்து செந்தில்குமார் கோஷ்டியினர் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து செந்தில்குமார் உள்பட 4 பேர்களை கைது செய்த போலீசார், விஷ்ணுப்ரியா தந்தையையும் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.