close
Choose your channels

நான் இருந்திருந்தால் ஒரு கொலையே பண்ணியிருப்பேன்: மகத்

Thursday, September 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நால்வர் மட்டுமே இருப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கருதி தினமும் இரண்டு பேர் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்றாயன் மற்றும் மகத் வந்துள்ளனர்

இந்த வாரம் முழுவதும் சண்டை சச்சரவு இல்லாமல் போட்டியாளர்கள் ஜாலியாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே நடந்த சம்பவங்களை நடித்து காட்டியும், வீடியோவில் பார்த்தும் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஒரு சம்பவத்தை நடித்து காட்ட, அதற்கு மகத், 'நல்லவேளை நான் இந்த வீட்டில் இல்லை, இருந்திருந்தால் ஒரு கொலையே பண்ணியிருப்பேன் என்று கூற மற்ற போட்டியாளர்கள் சிரிக்கின்றனர்.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வரும்போது தான் ஏன் அழுதேன் என்று தெரியவில்லை என்றும் அந்த உணர்வை விளக்க வார்த்தைகளே இல்லை என்றும் செண்டிமெண்ட்டாக மகத் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.