ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், டி.ராஜேந்தர் உள்பட பல கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில் இந்த கட்சிகள் குறித்தெல்லாம் ஊடகங்களில் எப்போதாவது மட்டுமே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி குறித்து தினமும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்று காலை ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் டிடிவி தினகரன் போல் ஐந்து சதவிகித வாக்குகள் மட்டுமே பெறுவார். என்று கூறினார். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சற்றுமுன் கருத்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ரஜினி கட்சி தொடங்கி கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும், ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர் என்றும், நாங்கள் அவரை மிகவும் மதிக்கின்றோம். என்றும் கூறியுள்ளார்.
வரும் ஜனவரியில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினி ரசிகர்களை விட, அதிமுக அமைச்சர்கள் தினந்தோறும் கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.