close
Choose your channels

விஜய் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்: தமிழக அமைச்சர்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசமே இருப்பதில்லை. குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்ட கமல்ஹாசனுக்கும், அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினிக்கும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'சர்கார்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பலரது பேச்சில் அரசியல் சாயம் இருந்தது. குறிப்பாக விஜய் பேசியபோது, 'மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்றும் 'மேலே இருப்பவர்கள் ஊழல் செய்யாமல் இருந்தால் தானாகவே ஊழல் மறைந்துவிடும்' என்றும் கூறினார். மேலும் 'சர்கார்' திரைப்படத்தில் அரசியலை மெர்சலாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் கலந்த இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'நடிகர் விஜய்யை அரசியலுக்கு மக்கள் அழைத்தார்களா? நடிக்கிற வேலையை மட்டும் அவர் பார்க்கட்டும் என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.