அன்னையர் தினத்தில் முதல்முறையாக 'அம்மா' என கூப்பிட்ட குழந்தை: பிக்பாஸ் நடிகர் நெகிழ்ச்சி
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ராதாமோகனின் ’அபியும் நானும்’ கமல்ஹாசனின் ’உன்னைப்போல் ஒருவன்’ போன்ற படங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவருக்கும் தொலைக்காட்சி நடிகை நிஷா கிருஷ்ணனுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு சமைரா’ என்ற பெயரும் வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த அன்னையர் தினத்தில் தங்களது குழந்தை முதன்முதலாக ’அம்மா’ என அழைத்ததாக கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அன்னையர் தினம் மற்றும் ’அம்மா’ என அழைத்த குழந்தை ஆகிய இரண்டும் ஒரே ஒரே நாளில் வந்துள்ளது மிகவும் அழகான விஷயம் என்றும் தங்கள் மகள் சமைராவின் ‘அம்மா’ என்ற குரலை முதல் முறையாக கேட்டு இருவரும் பரவசம் அடைந்தோம் என்றும் கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
தனது குழந்தை ‘அம்மா’ என்று அழைத்த அந்த ஒரு நிமிடம் தனது தனக்கு தாய்மையின் உணர்வு புரிந்ததாகவும் கணேஷின் மனைவி நிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கணேஷ்-நிஷா தம்பதிகள் இன்று உண்மையான அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.