close
Choose your channels

ரஜினிக்கு நாசர் எழுதிய வாழ்த்து கடிதம்

Friday, April 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்று இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் இருந்து இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகிய 'பத்ம விபூஷன்' விருதினை பெற்றார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


நாசர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தங்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து நாங்கள் பெருமிதத்துடன் மகிழ்வு கொள்கிறோம், தாங்கள் மென்மேலும் விருதுகளும் பெருமைகளும் பெறவேண்டுமென மனதார வாழ்த்துகிறோம் என்று எழுதியுள்ளார்.

மேலும் நாசர் எழுதிய மற்றொரு கடிதத்தில் 'தாங்கள் ஏப்ரல் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் விழாவில் கலந்துகொள்ள இசைந்ததற்கு மிக்க நன்றி. காலை பத்துமணிக்கு தொடங்க இருக்கும் விழாவை தாங்களும் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களும் துவங்கிவைக்க வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். மாலை ஏழு மணிக்கு பத்மவிபூசன் விருது பெற்றமைக்காக மக்களரங்கில் பாராட்டும் தெரிவிக்க ஆசைப்படுகிறோம். தங்கள் வருகையை பேராவலோடு எதிர்பார்க்கிறோம்' என்றும் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.