close
Choose your channels

மீண்டும் பிக்பாஸில் ரீஎண்ட்ரி? புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம்: ஓவியா பதில்

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன உளைச்சல் காரணமாக வெளியேறிய ஓவியா சற்றுமுன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்வாரா? அவரது புதிய ஹேர்ஸ்டைலுக்கான காரணம் என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் முதலில் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். வெளியே வந்தவுடன் தனக்கு இருந்த ரசிகர்களின் ஆதரவை கண்டு ஆச்சரியம் அடைந்ததாகவும், தன்மீது இவ்வளவு பேர் அன்பு வைத்துள்ளார்களா? என்றும் அவர் அதிசயித்தார்.

மேலும் அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற பங்கேற்பாளர்களை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என்றும், குறிப்பாக சக்தி, ஜூலியை யாரும் தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது 14 பேர்களில் ஒருசிலர் தன்னை கார்னர் செய்ததற்கே தனக்கு இருந்த மன உளைச்சல் தனக்கு மட்டுமே தெரியும் என்றும் அவ்வாறு இருக்கும்போது இத்தனை பேர் அவர்களை தவறாக விமர்சனம் செய்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பது குறித்து தனக்கு வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று உறுதியுடன் கூறிய ஓவியா, ஆனால் அதே நேரத்தில் தனது திரையுலக பயணத்தை தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் நான் நடித்திருக்கின்றேன் என்ற காரணத்தால் மட்டும் ஒரு திரைப்படத்தை காண வேண்டாம் என்றும் பிடித்தால் மட்டும் பார்க்கவும் என்றும், அதே நேரத்தில் தான் நடித்த படம் நன்றாக இல்லை என்றால் தாராளமாக கடுமையாக விமர்சனம் செய்யலாம் என்றும் அவர் நேர்மையுடன் கூறினார்.

மேலும் சிகிச்சை காரணமாக தனது முடி எடுக்கப்பட்டதாக கூறப்படும் வதந்தியை மறுத்த ஓவியா, கேன்சர் நோயாளிகளுக்காக விக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு தான் முடியை தானமாக கொடுத்ததாக விளக்கமளித்தார். ஓவியாவின் தாயார் கேன்சர் காரணமாக மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உலகத்தில் யாரும் முழுமையான நல்லவர் இல்லை என்றும் தானும் நிறைய தவறுகள் செய்திருப்பதாகவும் கூறிய ஓவியா, தன்னை முன்னுதாரணமாக யாரும் எடுத்து கொள்ள வேண்டாம் என்றும், நீங்கள் நீங்களாகவே வாழுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.