close
Choose your channels

சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் என அறிவித்தவர் மீது காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்த பாமக மாவட்ட செயலாளர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற போதிலும் இந்த படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளுக்கு பாமக கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அன்புமணி எம்பி அவர்கள் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதினார் என்பதும் அந்த கடிதத்திற்கு சூர்யா பதில் கடிதம் எழுதி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி என்பவர் சூர்யா மீதும் இயக்குனர் ஞானவேல் மீதும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது மயிலாடுதுறைக்கு சூர்யா வந்தால் அவரை தாக்கும் இளைஞருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.