close
Choose your channels

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய பவர்ஸ்டார், சிக்கிய மனைவி!...

Monday, December 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவர் மனைவி, மகள் மாறி மாறி புகார் கொடுக்கவும், பின்னர் புகார் வாபஸ் வாங்கப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மனைவி கடத்தப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு மர்ம கும்பல் பவர்ஸ்டாரை கடத்தி ஊட்டிக்கு கொண்டு சென்று அவரிடம் இருந்து சொத்தை எழுதி வாங்க முயற்சித்ததாகவும், அதன்பின்னர் அவருடைய மனைவி ஜூலியை தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் அவரை வரவழைத்து அவரையும் பிடித்து வைத்ததாகவும், பவர்ஸ்டாரின் மகள் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது தப்பி வந்ததாகவும், அவருடைய மனைவி மட்டும் கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளதாகவும் அவரை மீட்டுத்தரும்படியும் பவர்ஸ்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறை இது தொடர்பாக 7 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேர் மீது 147 (கலவரம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்படுதல்) 364 (எ) (பணையத்தொகைக்காக கடத்தி அடைத்து வைத்தல், மிரட்டுதல்), 365 (ரகசியமாகவும் தவறான உள்நோக்கத்துடனும் கடத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளத். மேலும் பவர்ஸ்டாரின் மனைவியை மீட்ட போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.